Wednesday 20 November 2013

குற்றாலம் - கவிதை - 4



குற்றாலம்

                                          நான் வரைந்த எண்ணை ஓவியம்
வெள்ளருவிப் புகைப்படம்
பார்க்கையிலே
வெறுமை வந்து
சூழ்கிறதம்மா

தூள்ளித் திரிந்த காலம்
துயரமாய் ...
நிழலாடுகிறதம்மா

வாரம் தவறாமல்
வந்த கதை சொல்கிறது ..!                         
எண்ணைய் பசை போன கதை
என்னைப் பிசய வைக்கிறது                                                                

                                                                         
மூச்சடக்கி நிற்பேன்
பஞ்சாய் தலை பறக்க _

நினைக்கிறேன்  !
பஞ்சாய் தலை பறக்க
பாதி வயதை உள்ளடக்கி … !

இப்போதோ _
இருவருக்கும் ஆனந்தம்
அணைப்பது  நான்  மட்டும்  அல்ல
அருவியும் தான் … !

இருவரின் ஆனந்தக் கண்ணீர் _
இணைந்தே ஓடுகிறதம்மா …!

உடல் குறுகினாலும்
உன் நினைவு குறையாது
தாய் தந்தையுடன்
தாலாட்டியதுநீயும் அல்லவா  … !!!





ஆர். உமையாள் காயத்ரி.