Tuesday 5 November 2013

சந்தோஷ நிமிடங்கள் - கவிதை - 2



சந்தோஷ நிமிடங்கள்

கண்கள் விரிந்தன … !!!
கடலை விழிங்கிட _

நீலமும் பழுப்புமாய்
விரிந்து விரிந்து கிடந்தன
ஒற்றுமையாய் …
உறவுக் கூடலில்
சந்தோஷ அலைகள்
சத்தமிட்டவாரே … என்
கால்கள் தொட்டு
பகிர்ந்து கொண்டன … !
பகிர்தலின் பரவசம்
பாதமிருந்து பரவின _
தேகம் முழுமையும் … அப்பா … !!!

சலனமற்ற பார்வை
சந்தோஷத்தை அப்பிக்கொண்டன
லயித்தல் லாவகமாய் போயின
குதூகலம் குழந்தையாக்கின …
இயற்க்கையோடு இணையும் வேளை
இன்பரசம் பருகும் வேளை
சக்தியின் பொங்குதலில்
நோய்கள் சலவையாகின …

நன்றி சொல்லும் வேளை
நகர மனமின்றி _
வாக்கு ஒன்று வைத்தேன்
வரும் வாரம் வருகிறேன் என்று … !!!

கண்கள் விரிந்தன … !!!
கடலை விழுங்கிட .




ஆர்.உமையாள் காயத்ரி.



No comments:

Post a Comment