Thursday 19 December 2013

சாய் பாமாலை - 3


                                                       ஆடுக ஊஞ்சல் ஆடுகவே





                     ஆடுக  ஊஞ்சல் ஆடுகவே
                     சாய் ராமா ஆடுகவே   (2)

                     ஆட்டும் மாயை அது தன்னில்
                     காக்கும் எங்கள் குருநாதா
                     அன்பை ஊட்டி வளர்க்கின்றாய்
                     அன்னை நாதா ஆடுகவே      (ஆடுக)

                     எண்ணம் அதிலே உன்னையிட்டு
                     ஏழைக்கு அன்னம் உகந்துமிட்டு
                     ஏற்புடன் வாழ வழிகாட்டும்
                     எங்கள் நாதா ஆடுகவே        (ஆடுக)

                     நாட்டின் வளங்கள் பெருகிடவே
                     நலிந்தோர் எல்லாம் உயர்ந்திடவே
                     உந்தன் கீதம் இசைத்திடவே
                     உறவாய் நீயும் இனிதாடு       (ஆடுக)

                     பொற்ற மக்களைச் சீராட்டி
                     ஈய்ந்து வாழ வழிகாட்டி
                     இல்லறம் இனிதே நடத்திடவே
                     ஈசா நீயும் ஆடுகவே           (ஆடுக)

                     பக்தியால் ஊஞ்சல் அமைத்திட்டு
                     பரிவுடன் உன்னை அமர்த்திட்டு
                     பாபா உன்னை ஆட்டிடவே
                     ஆடுக ஊஞ்சல் ஆடுகவே      (ஆடுக)


                     சுற்றம் சூழ்ந்து சுகம் காண
                     நட்பில் உயர்ந்தோர் இணந்திடவே
                     சாகும் வரையில் உன் நாமம்
                     சலிக்காமல் சொல்வேன் நீ ஆடு  (ஆடுக)





ஆர். உமையாள் காயத்ரி.


No comments:

Post a Comment