Tuesday 17 December 2013

காய்கறி கலை

                                                காய்கறி ....
                                                என் முன்னே ....!
                                                கலைவடித்தேன்
                                                கண்முன்னே...!!!
















                                               

                                       எகிப்துக்கு வந்த புதிதில் எப்படி நேரத்தை போக்குவது அப்படின்னு சில சமயம் தெரியாமல் இருந்தது. அப்படி ஒரு நாள் .... உணவு மேசை மேல் வாங்கிய காய்கறி கண்ணில் பட .... !  ஏதாவது இதில் பண்ணலாமேன்னு தோன... காய்கறி மயில் உருவானது.  நேரம் போனது தெரியலை. புதிதாய் ஒன்னு செய்யும் போது ரொம்ப உற்சாகமா ஆகிடுறோம். அதிலேயே கவனமா இருக்கும் சமயம்  மனம்  அமைதியா தெளிவா ஆகிடும்.
                                     அப்புறம் என்ன நேரம் நல்லா போனது.  புகைப்படம் எடுத்தோம். ஒரு நாளை வெற்றி கொண்டேன். இன்று புகைப்படம் கண்ணில் பட ....படமும் கதையும் - உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். 

ஆர். உமையாள் காயத்ரி.







No comments:

Post a Comment