Thursday 9 January 2014

நன்றிப் பூக்கள்






அன்பார்ந்த பார்வையாளர்களுக்கு,
                               நன்றிகள் பலப்பல. உங்கள் வருகையால் 1000 த்திற்கு மேல் பார்வைகள் பதிவாகிக் கொண்டு இருக்கிறது. பல வகையான சுவைகளுடன் எளிமையாக, யதார்த்தமாக உள்ளது உள்ளபடி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 
                                வந்து உலாவும் உங்களுக்கு கடுகளவாவது பயன் இருக்கும் என நம்புகிறேன். உங்கள் வருகையால் எனக்கு உற்சாகமாய் இன்னும் சிறப்பாக பதிவுகள் இட வேண்டும் என ஆவல் மிகுகிறது. என் டைரியில் உறங்கிய கவிதைகளுக்கு உயிர் வந்திருக்கிறது. அவ்வப் போது மலரும் கவிதைப் பூக்களும் உங்களுக்கு வாசனை வீச மலர்ந்து விடுகிறது. வெகு வருடங்களாக எழுத வேண்டும் என எனக்குள் இருந்த ஆசை இப்போது தான் முயற்சி செய்து நடைபயில ஆரம்பித்திருக்கிறது.
                         

                         மனம் ஒப்பி
                         மகிழ்ந்து செய்வது
                         மலரும் போது
                         மணம் வீசி
                         மற்றவர்களையும் மகிழ்விக்கும் அல்லவா…..!!!
                         கற்றது கடுகளவு
                         இல்லாத போதும்……..!!!!!    
     



அன்பான நண்பர்களுக்கு…….வணக்கம்.
ஆர்.உமையாள் காயத்ரி. 







1 comment:

  1. எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

    ReplyDelete