Thursday 13 February 2014

சாய் பாமாலை - 5


சர்வம் சாய் மயம்





சர்வேஷ்வரனும் நீயே
சச்சிதானந்தனும் நீயே
அகப்பிரம்மமும் நீயே
அண்டகோடியும் நீயே

அருகில் இருப்பாய் நீயே
அறியாத அருவமும் நீயே
உள் குரல் செப்பலும் நீயே
உணர்ந்திட வைப்போனும் நீயே

கருத்தின் கருப் பொருள் நீயே
கண்களின் காட்சியும் நீயே
அணைக்கும் அன்பும் நீயே
அன்புகொடுக்க வைப்போனும் நீயே 


ஆர். உமையாள் காயத்ரி.

1 comment: