Wednesday 19 February 2014

கவிதைத் துளிகள் - கவிதை - 10

கவிதைத் துளி - 1

சாரல்  மழை
விட்டுப்  போனது
தரையில்
புது  ஓவியங்களை...!!!



கவிதைத் துளி - 2

மழைத்துளி
அசைவமானது...
செம்மண்ணில்  வீழ்ந்ததால்...!!!


கவிதைத்துளி - 3

காலிக்  குடங்களில்  காற்று
வெளிநடப்பு  செய்தன...
கார்ப்பரேஷனின் - நீர்
ஆக்கிரமிப்பால்...!!!   


கவிதைத்துளி - 4

புல்லின்  மேல்
பூக்கள்...!
விடியலில்  வந்தது
விடிந்தபின்  சென்றது...!


கவிதைத்துளி - 5

வாடைக்  காற்றை
வருடம்  முழுவதும்
வரவேற்கிறது -
கோபுர  வாசல்...!!!



ஆர். உமையாள் காயத்ரி.





No comments:

Post a Comment