Thursday 6 March 2014

கவிதைத் துளிகள் - கவிதை - 13


கவிதைத் துளி - 6

மாற்றி  யோசிப்பது...!
மனிதன்  மட்டும்  அல்ல
மழைக்காலம்   கூடத்தான்...!!!



கவிதைத் துளி - 7

மெளனத்தின்
மொழி  பெயர்ப்பாளர்
கண்கள்...

கண்கள்...
கவனிக்கவில்லை  என்றால்
கண்  தெரியாத  காட்டில்
நாம்.....!!!


கவிதைத்  துளி - 8 

நீரின்  வேகம்
மின்சாரம்...!
நீரில்  பாய்ந்தால் -
துவேசம்...!!!


கவிதைத் துளி - 9


மஞ்சள்  பூசி
காத்திருந்தாய்...
கதிரவன்  வரவை  நோக்கி...!

மண்னை  நோக்கினாய் -
மதிவந்ததால்
மங்கை  நீ...!!!


கவிதைத் துளி - 10

தோழமை  தூண்கள்  தான்...
இருப்பவனுக்கு -

இல்லாதவனுக்கு -
கலைகள்  தான்
ஆயிரம்  கால்மண்டபம்...!


 
R.Umayal Gayathri.

1 comment:

  1. அனைத்தும் அருமை...!

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete