Thursday 17 April 2014

சாய் பாமாலை - 6 Sai Pamaalai - 6

பாடல் - 6

அன்பில்  தீபம்  ஏற்றி
உன்  அருகில்  வாழ்கிறேன்
செய்யும்  பணியின்  ஊடே
உன்  காணம்  இசைக்கிறேன்


நீயாகி  நானும்
நானாகி  நீயும்
கரைந்தோம்  காற்றின்  ஊடே
காலம்  இல்லை  நாதா

பூவின்  மென்மை  நாமம்
பஞ்சின்  மென்மை  பார்வை
பனிபோல்  உள்ளம்  உருகி
பாதாபிஷேகம்  செய்வேன்

பூர்வ  ஜென்ம  புண்ணியம்
கண்டேன்  உன்னை  நானும்
காட்சி   தந்து   நீயும்
என்னை  ஆட்சி  செய்கிறாய்

குருவடி  பற்றுதல்  பாக்கியம்
குருவே  பற்றுதல்  பெரும்பாக்கியம்
அண்டத்தில்  அலையாய்  என்றும் நீ
அணைத்து   இருக்கிறாய்  அதை  உணர்கிறேன்.

.
ஆர்.உமையாள் காயத்ரி.


1 comment:

  1. அண்டத்தில் அலையாய் என்றும் நீ
    அணைத்து இருக்கிறாய் அதை உணர்கிறேன்.

    உண்மையானது...! நன்று.

    ReplyDelete