Thursday 3 April 2014

அதுவே இது- இதுவே அது


அப்பாவின் விளையாட்டு
அறிந்து பார்க்கும் விளையாட்டு


அறிவைப் படைத்துடன்
அறியாமை கலந்துவைத்தாய்
எதிரில் நிற்பதாய்க் காட்டி
என்னுள் ஒளிந்து இருக்கிறேன் என்றாய்

மயக்கும் உலகைப் படைத்து
மாயை அவையென மறுமொழிந்தாய்
எல்லாயிடந்தனிலும் இருக்கும் நீ-ஆனால்
ஏங்கிச் சாவிடில் இறங்கமாட்டாய்

பரீட்சை பல செய்து பரீட்சித்து
பக்குவம் ஆனதா ஆத்மா-ஆகாவிடில்
வையகம் சென்று வாழ்
வாகை சூடு நானிடத்தில்

நம்மைச் சேர இதுவே உபயம்
அறுந்த அது கடக்கும்-கடந்த பின்
அது இதுவில் அடங்கும்
போய்வா மகனே போய் வா என்கிறாய்.


R.Umayal Gayathri.


1 comment: