Friday 18 April 2014

Peas Pulav - பட்டாணி புலவ்

பட்டாணி புலவ்


 
தேவையான பொருட்கள்

பட்டாணி  –  3/4 கோப்பை
அரிசி  –  1 1/4 கோப்பை
வெங்காயம் – சிறியது 2


தாளிக்க வேண்டியவை
நெய் – 1 மே.க
ரீபைண்ட் எண்ணெய் – 1 மே.க
ஏலம் – 1
கிரம்பு – 2
பட்டை – 1
முந்திரி – 5
பிருஞ்சி இலை –1/2


அரைக்க வேண்டியது

மிளகாய் பெரிது – 1
( பச்சை or பழ மிளகாய் )
இஞ்சி – ½ துண்டு
பூண்டு – 2 பல்
சோம்பு – ½ தே.க




Basmati அரிசியைக் கழுவி விட்டு 10 நிமிடங்கள் ஊறவிடவும்.

அரைக்க வேண்டியதை அரைத்து நீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும். இப்படி செய்வதால் சக்கை இல்லாமல் சாதம் உதிராக வரும்.

நெய், எண்ணெய் விட்டு தாளிக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கிவிட்டு பட்டாணி சேர்த்து வதக்கவும். பின் அரிசியை வடிகட்டி விட்டு அதையும் சேர்த்து சற்று வறுக்கவும்.

1 கோப்பை அரிசிக்கு 2 கோப்பை என்கிற கணக்கில் அரைத்த மசாலா நீர் சேர்த்து உப்பு போடவும். குக்கரில் வேகவிடவும்.  குக்கரில் விசில் சத்தம் வருகிற மாதிரி இருக்கும் போது தீயைக் குறைத்து வைக்கவும். 5 நிமிடத்தில் தீயை அணைக்கலாம். சாதம் வெந்து விடும்.

    



குறிப்பு:

பட்டாணியை சீஸன் போது வாங்கி தோல் நீக்கி  Frizer -ல் சேமித்து வைத்தால் வருடம் முழுவதும் உபயோகிக்கலாம்.


ஆர் .உமையாள் காயத்ரி.



4 comments:

  1. உங்களின் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி...

    ReplyDelete
  2. I tried it and it came good. thanks for the reciepe.

    ReplyDelete