Monday 2 June 2014

மனதின் அனல் - கவிதை

மனதின் அனல்

வருடிய நினைவலையில்
வசந்தமும்...
வாட்டமும்...
வதங்கலும்...
வந்த வழி என்னவோ...?
போன வழி என்னவோ...?


உண்மை கங்கு ஒன்று
உள்ளத்தில் உள்ளதால்
வீசுவன அனைத்தும்
பொசுங்கிப் போயின



கங்கின் கனல்
காலமொல்லாம்
காக்கும் அனல்...

நல்லவை தீயவை - யாதும்
அனலுக்கு ஒன்றே...!
சுத்தம் செய்து - அதுவும்
சுத்தமாக இருப்பதால் - என்றும்
சிறு ஒளி அது
சாட்சியாக...!

சாட்சியாக...!
மெய் பொருளாய் விளங்கிடும்
விளக்கம் தேவையில்லை
எளிய வாழ்க்கைக்கு
சிறிய அனல் - சிறப்பாய்...!!!
அதனின்று...
விளக்குகள் ஒளிபெற -
வரிசையாய் ஜோதிகள்...!!!

மின்னும் அனல் துளி
கோடி கோடியாய்...!!!
மனதின் அனல்
உத்தம மனிதர்கள்...!!!





ஆர்.உமையாள் காயத்ரி.



4 comments:

  1. மனதின் அனல்
    உத்தம மனிதர்கள்...!!! உண்மை அனல் போன்றதே...

    ReplyDelete
  2. வணக்கம்
    இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete