Sunday 5 October 2014

குழிப்பணியாரம் - காரம்

கார குழிப்பணியாரம் பார்க்கலாமா...




தேவையான பொருட்கள் 

http://umayalgayathri.blogspot.com/2014/10/chettinad-tiffin-kuzhipaniyaram.html

வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி - 1 கைபிடி
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 3 மே.க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க வேண்டியது

கடுகு - 1/2 தே.க
வரமிளகாய் - 1
க.பருப்பு - 1 தே.க
உ.பருப்பு - 1 தே.க
சீரகம் - 1/2 தே.க



தாளித்து விட்டு வெங்காயம் போட்டு வதக்கி பின் கருவேப்பிலை,கொத்தமல்லி,தே.துருவல் போட்டு சற்று வதக்கி இறக்கவும். 






இதை மாவில் சேர்த்து கலக்கவும்.













எண்ணெய் விட்டு காயவும்














 மாவை ஊற்றவும். வேகவும் திரும்பி விட்டு வேகவும் எடுக்கவும்.









                                             கார சட்டினியுடன் பரிமாறவும்.




15 comments:

  1. காரப் பணியாரமும் சூப்பர்!

    நானென்றால் இரண்டு பச்சைமிளகாய்
    குட்டிக் குட்டியாக வெட்டிச் சேர்ப்பேன்.. :) அப்போதான் நச்.. என்றிருக்கும்!
    சும்மாவே சாப்பிடலாம்! பெரியவர்கள் மட்டும்!..:)

    அருமை! நல்ல பகிர்வு உமையாள்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரி நானும் 2 பச்சை மிளகாயையும், தாளிக்கும் போது 1 வரமிளகாயும் சேர்த்தேன். அதில் போட விட்டு விட்டேன். இப்போது சேர்த்து விட்டேன். நன்றி . இரவில் இப்பதிவை அவசர அவசரமாக எழுதினேன் அடுத்த நாள் வெளியில் செல்வதால் சேர்க்க தவறி விட்டேன் அதான்.

      ஹஹஹஹ...என்ன செய்வது சில நேரங்களில்... !!! நன்றி தோழி.

      Delete
  2. கேட்க, வாசிக்க நல்லாத்தான் இருக்கு! எப்ப சாப்பிட கிடைக்குதுனு பார்ப்போம்!

    பகிர்தலுக்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. சகோதரியை அதான் தங்கள் துணைவியாரைச் செய்யது தரச் சொல்லுங்கள் நாளையே ருசிக்கலாம். சகோதரியாரே பொறுத்தருளுங்கள். நன்றி இருவருக்கும் தான்.

      Delete
  3. ஆஹா இனிப்புக்கு அடுத்து காரமா ?

    ReplyDelete
    Replies
    1. ஆம்மாம்..இதுவும் அதுவும் வேண்டுமல்லவா..? நன்றி சகோ.

      Delete
  4. வணக்கம்
    செய்முறை விளக்கம்அருமை... தேவை ஏற்படும் போது செய்து பார்க்கிறோம்... பகிர்வுக்கு நன்றி
    த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. கார குழிப்பணியாரத்திற்கு தொட்டுக்கொள்வதற்கு ஒன்றும் சொல்லவில்லையே!!!

    ReplyDelete
  6. அதாவது கார சட்னியைப் பற்றி சொல்லவில்லையே என்று சொன்னேன். ஒரு படமாவது போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  7. இனிப்பை விட உறைப்பு தான் கூட விருப்பம் ஆனால் இரண்டுமே நமக்கு ஆகாது என்ன செய்வது பரர்க்க மட்டும் தான் முடியும். பார்க்க நன்றக வே உள்ளது ருசியும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன் நீங்க தான் taste பண்ண தரவே இல்லையே. நன்றிடா வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  8. படங்களில் பார்க்கவே மிகவும் அழகாக அருமையாக பசியைக்கிளப்பி விடுவதாக உள்ளன. செய்முறைக்குறிப்புகளும் பயனுள்ளவை. பகிர்வுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete