Thursday 20 November 2014

பருப்பு சாதம்

பருப்பு சாதம்....கண்டிப்பா சின்ன வயசுல சாப்பிட்டு இருப்போம்.
சாந்தமான, சத்தான உணவு இல்லையா...? அந்த பருப்பு வாசமும், நெய்யின் மணமும் சும்மா கும்முன்னு இருக்கும் இல்ல. பெரியவர்களுக்கும் அது பிடிக்கும்.
குழந்தைகளுக்கு பருப்பு சாதம் கொடுப்போம். நாமும் அது போலும் சாப்பிடலாம்...இல்லை என்றால் நமக்கா இதைப் பண்ணி சாப்பிடலாம்.

சுலபமாக, சத்தாக...விரைவாக செய்து சாப்பிடலாம்.



ஆத்மா ராமா






கண்கள் மூடிட நிழலாடும்
காவிய நாயகன் திவுருவம்
மெய் மேனி நிஜமாகும்
மெய்யே அவன் நிஜமாகும்
கல்வி கேள்வி தேவையில்லை
கண்டால் போதும் மனமதுவே

Tuesday 18 November 2014

பொழுது புலர்ந்தது…!!!


           பறவைகளின்  க்ரீச்..  க்ரீச்…  சத்தம்.  பொழுது  புலர்கிறது. அதிகாலை வேளையில்  அச்சத்தம்  இனிமையாக  கேட்கிறது. விழித்தும்  எழ மனமில்லாமல்  பறவைகளின்  அந்நாளின் வரவேற்பைக் கேட்டவண்ணம்  படுத்துக்  கிடப்பது  தனி  சுகம். விடுமுறை நாள் என்றால்  கேட்கவே  வேண்டாம்.


Monday 17 November 2014

ஒரு கோப்பை குளம்பி


காப்பி பிரியர்களே....வாருங்கள்

ஒரு கோப்பை குளம்பி அருந்தலாமா...?

நீ கூப்பிட்டுவிட்டாய்....காப்பின்னு வேற சொல்லிட்ட...அப்புறம்...அது வந்து

என்ன காப்பிம்மா...

புரூ காப்பியா...இல்லை..சன்ரைஸா...வேற ....ம்ம்....நெஸ்கேப் என்ன கரைக்கிட்டா...இரு.. இரு...பில்டர் காப்பி....?


சுவைத்துக் குடிக்கையில்...அஹா...அந்த நிமிடங்கள்....பிலீஸ் தொந்தரவு செய்யாதீர்கள்....




நீ என்ன சும்மா இல்லாமா இப்போ ஆசையை கிளப்பிட்ட... என நினைப்பவர்கள் ....

ஒருகையில் காப்பியுடன் படிக்க... 


Saturday 15 November 2014

இனிப்பு & உப்பு ஆப்பம்












ஆப்பம் சாப்பிட
ஆசையா...
அன்புடன் சுவைக்க
ஆசையா...


இனிப்பு உப்பு ஆப்பத்தை
தேங்காய் பாலில் ஊறவிட்டு
திகட்டிட உண்ண
ஆசையா...

ஓட்ஸ் குழிப்பணியாரம்

ஒரு சத்தான குழிப்பணியாரம்.

இப்போ ஓட்ஸை நிறைய பயன் படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

எளிய, விரைவாகவும் புது மாதிரியாகவும் சாப்பிடலாமா...?




Friday 14 November 2014

உலா போகும் நேரம்...!!!




நிலவு
உலா போகும் நேரம்

சூரியன்
குடைக்குள் மறைந்தான்

Thursday 13 November 2014

ராஜ்மா தக்காளி தோசை


இலயிப்போமா....!!!


பாடல்கள் சிலவற்றை நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும்

நாமாவளி பாடல்கள் நம் மனதை கரைத்து விடும்.

அதன் இனிமையை சுவைத்து தான் உணரமுடியும்.

கேளுங்களேன் ...


கண்ணன் பாடல்


கதைக்குள் கதையாய் யுறைந்தாயப்பா பாகவத்தில்
கவர்ந்திட்டாய் நாளுமெனை மறந்து கிடக்க
காதுதுடிக்கிறது கேளா திருந்திட்டால் என்செய்வேன்
காதுகுளிர நாளும்கதை கொடு

Wednesday 12 November 2014

விழித்தல்...!!!


உலகைப் புரிய வைத்த
உறவுகளுக்கு ஒரு கோடி நன்றிகள்

சூழலைப் புரிய வைத்த
சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

மாற்றிமாற்றிப் பேசி மாறாத ஒன்றைப் புரிய வைத்த
மற்றவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

Tuesday 11 November 2014

தேங்காய் சாதம்

நாம எப்பவும் செய்றது தான்  இல்லையா...






மென் சுவாசம் விட...!

நாற்பதுக்கு மேலே
நாடிவருமொரு தனிமை
நலமோ…? பெண்மைக்கு
உடல்தரும் இம்சை...

கொஞ்சிய குழந்தைகள்
விடலைகளாய் வளர்
விஞ்சிய பொழுது 
விரயமாய் நிற்க யாம்
தஞ்சிய நேரம் 
தழுவும் சோம்பலை

திடீரென ஓய்வு 
திகட்டும் இனிப்பாய்...



Monday 10 November 2014

கேரட் கீரை சப்பாத்தி

கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் சப்பாத்தி.

புதுமையான வெரைட்டி..

அத நாங்கல்ல...சொல்லனும் அப்படீங்கறீங்க...? அதுவும் சரிதான்.

ஒரு எட்டு பார்க்கலாமா..?




Sunday 9 November 2014

வானத்தின் முகவரி



முகவரி மாறியது
வானத்தில்
மழை.

கையில் கடிதம்
தட்டியது கதவை
இடி

Wednesday 5 November 2014

பாலாஜிக்கு பா இரண்டு

இன்று இரண்டு பாடல்கள்.
பாமாலை பாடல் 1



எண்ணில் அடங்கா ஏழுலகில் அடங்கா
தண்ணில் அடங்கும் அவன் தாள்படிவாய்
கண்ணில் நிறைவான் கருத்தில் உறைவான்
சுவைவாய் அவன் பெயர் மொழி

விடுகதை - 6

என்னங்க ....சின்னப்புள்ளையா இருந்தப்ப நாம எல்லோரும் விளையாடுவோம் இல்ல......

இப்ப இது மாதிரியில்லாம பஸில்ஸ் அப்படின்னு ஆடுறாங்க...

இந்த மாதிரி விளையாட்டின் போது மொழி உச்சரிப்பும்,புது புது வார்த்தைகளும், கவிதை நயம்மும், நாட்டுப்புற பாடல்களும் என தானாவே கற்றுக் கொள்ளும் படி இருந்தது.

நல்லா யோசிப்போம்....சந்தோஷமாக இருக்கும்...இல்ல



Tuesday 4 November 2014

Sunday 2 November 2014

தண்ணீர் இல்லாமல் எப்படி காம்பெளண்ட் கட்டுவது

வீடு கட்ட இடம் வாங்கியாச்சு. போர் போட வேண்டும் அல்லவா…?
பூமிக்குள் எங்கே தண்ணீர் இருக்குன்னு பார்க்க போர் ஆபீஸில் இருந்து ஆளைக் கூட்டிக் கொண்டு போனேன். அவர் இடத்துப் பக்கத்தில் ஒரு மரக்கிளையை எடுத்துக் கொண்டு கவட்டைப்புல் அடித்து விளையாடுவோமே அது மாதிரி உடைத்துக் கொண்டார்.

Saturday 1 November 2014

மோர்க் குழம்பு





காலிஃப்ளவர் மன்சூரியன்

இது எல்லோருக்கும் பிடித்தமான உணவு இல்லையா...

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பக்கூடியது.
இப்போ சீஸன் ஆரம்பித்து விட்டது இல்லையா...செய்யலாமே நாமும் இதை..