Wednesday 21 January 2015

வெந்நீர் மழை




வெந்நீர் மழை...
தினம் தினம்
விட்டு விலக
மனம் வரவில்லை...!!!


மின்சாரபில் கண்டவுடன்
விட்டு விலக
மனம் ஏன் வந்தது...?

ஒவ்வொரு துளியிலும்
ரசனையாய் அதன் இதம்
உயிர் வந்தது போல் இருந்தது

ஆனந்தம்...
அத் தருணங்கள்...
சுகமான ...குளியல்

குளியலறை முழுவதும்
சூழ்ந்து கொண்டன ஆவிகள்...!!!
பயம் மட்டும் வரவில்லையே...!!!

மழை
பெரிய ஆனந்தம்
வெந்நீர் மழை
சிறிய ஆனந்தம்...!!!




29 comments:

  1. வணக்கம்

    அழகிய கவி கண்டு மகிழ்ந்தேன்... பகிர்வுக்கு நன்றி..த.ம1
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மகிழ்வு கண்டு மகிழ்ந்தேன் சகோ. ஆராரோ பாட்டை கண்டு விட்டேன்

      தம - நன்றி

      Delete
  2. மிகச் சரி
    இயற்கையே பேரானந்தம்
    பகிர்வுக்கும்தொடரவும் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரி
      இயற்கையே பேரானந்தம்//

      அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பேராந்தத்தை தந்து கொண்டிருக்கிறது

      வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா..

      Delete
  3. ரசித்தேன்...

    இன்னும் எத்தனை திறமைகள் இருக்கிறது....?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசனைக்கு நன்றி சகோ...

      இன்னும் எத்தனை திறமைகள் இருக்கிறது....? //

      அப்படியெல்லாம் இல்லை சகோ...

      Delete
  4. எங்களுக்கு இந்த வெந்நீர் மழை தான் பேரானந்தம்.

    ReplyDelete
    Replies
    1. குளிர் நேரத்தில் அது தானே ஆனந்தம்

      Delete
  5. குளியலறையிலும் ஆவி..
    வளமான கற்பனை தான்!.

    வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா

      Delete
  6. இந்த குளிக்கு இதமான வெந்நீர் மழை இலவசமா பொழிந்தமைக்கு நன்றி உமையாள். அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆஹஹஹா.....நன்றி தோழி.

      Delete
  7. விலக மனமில்லா வெந்நீர்க் குளியல்!
    இலக்கான தோபாட இன்று!

    மிக அருமை! வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. விலக மனமில்லா வெந்நீர்க் குளியல்!
      இலக்கான தோபாட இன்று!//

      ஆம் இலக்கானது கவிதை வடிக்க....வாழ்த்துக்கு நன்றி தோழி

      Delete
  8. வெந்நீர் மழை! ..ம்ம்ம் உங்கள் ஊர் குளிருக்கு வேண்டியதுதான்....இயற்கை மழை பேரானந்தம்தான்....சென்னையில் நடக்காமல் இருந்தால்.....

    இயற்கையில் ஹிமாலயப் பகுதிகளில் வெந்நீர் ஊற்றுக்கள் இருப்பது போல்...இருந்தால் எப்படி இருக்கும்....குளியல் அறையில் ஆவி!!!! சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. .இயற்கை மழை பேரானந்தம்தான்....சென்னையில் நடக்காமல் இருந்தால்.....///

      வாஸ்தவம் தான்...


      இயற்கையில் ஹிமாலயப் பகுதிகளில் வெந்நீர் ஊற்றுக்கள் இருப்பது போல்...இருந்தால் எப்படி இருக்கும்//

      ஆஹா சூப்பராக இருக்கும் சகோ...

      Delete
  9. "புது வெந்நீர் மழை இங்கு பொழிகின்றது..." என்று பாடலாமோ!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...ஆமாம் இல்ல....பாடலாம் தான்.

      Delete
    2. நண்பர் ஸ்ரீராமின் பின்னூட்டங்கள் பல ரசிக்க வைக்கின்றன!!! சூப்பர்!

      Delete
  10. இந்த ஆவி ,எல்லோருக்கும் பிடித்த ஆவியாச்சே :)
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பிடித்த ஆவி தான்....அது நம்மை பிடிக்காது ..இல்லையா....? ஆஹஹஹா....

      Delete
  11. குளித்தாலே சுகம் தான் ! அதிலும் சுடுநீர் மழை ,சுகமோ சுகம்! சொல்லவா வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. குளித்தாலே சுகம் தான் ! அதிலும் சுடுநீர் மழை ,சுகமோ சுகம்! சொல்லவா வேண்டும்!//

      ஆம் ஐயா

      நன்றி

      Delete