Wednesday 28 January 2015

மோர் புரதம்


மோர் புரதம் (Whey Protein)

பனீர் தயார் செய்யும் போது இத்தண்ணீர் பிரிந்து வரும்.
தயிரிலிருந்தும்  தண்ணீர் பிரிவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இதை தான் மோர் புரதம் என்கிறார்கள்.
.


மோர் புரதமானது Food Supplement ஆக உபயோகிக்கப்படுகிறது. 

Whey protein powder யும் டாக்டர்கள் சிலருக்கு பரிந்துரை செய்கிறார்கள்.

நாம் தயாரிக்கும் போது கிடைக்கும் இதை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் இல்லையா...?  வீணாக கீழே போகும் இதில் இவ்வளவு சத்து இருப்பது தெரிந்து கொண்டதால் உங்களுக்கும் தெரியப்படுத்தினேன்.

இதை நீங்கள் பிரியாணி, சூப், மோர்க்குழம்பு முதலியவற்றில் உபயோகப் படுத்தலாம். நான் இவ்வாறு செய்தேன். 

பனீர் தயாரித்த இந்நீர் 4 ,5 நாட்கள் வரைதான் ப்ரிஜ்ஜில் வைத்தாலும்  நன்றாக இருக்கும்.


டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் சாப்பாட்டுக்கு முன் எடுத்துக் கொள்ளப்படும் இப்புரதம் டைப்-2 சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை வெகுவாகக் கட்டுப் படுத்துவதாக கண்டறியப் பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு... 







27 comments:

  1. இதில் இத்தனை நன்மையா ! பகிர்வுக்கு நன்றி தோழி

    ReplyDelete
  2. அறியாதன அறிந்தோம்
    தலைப்பும் படங்களும் கூடுதல் சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அட! இதை என்ன செய்துவிட முடியும் என என் தோழிகள் நேற்றுகூட பேசிகொண்டிருந்தார்கள்!!!!! நல்லது தான் நன்றி தோழி!

    ReplyDelete
    Replies
    1. அட! இதை என்ன செய்துவிட முடியும் என என் தோழிகள் நேற்றுகூட பேசிகொண்டிருந்தார்கள்!!!!! //

      ஆஹா...டாப்பிக் இதை பற்றியா...பேஷ் பேஷ்...

      நானும் முதலில் அப்படி தான்....... என்ன செய்வது என நினைத்தேன்....இதன் நன்மை கருதி .....

      இதை எதில் சேர்த்து செய்தால் பொருத்தமாக இருக்கும் என யோசித்து....முயன்று பார்த்தேன். அட்டகாசமாக வந்தது டிஷ்...

      அதையும் அவ்வப்போது பகிர்கிறேன். மற்றவர்களுக்கும் பயன் படும் இல்லையா...?

      Delete
  4. அமுல் தயாரித்து (உறை நிலையில் ) வழங்கும் பனீரையே - நான் இங்கு பயன்படுத்தி வருகின்றேன்.

    நாமே தயாரிக்கும் போது கிடைக்கும் மோர் புரதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டது பயனுள்ள செய்தி..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மலிவான விலையில் இதை நாம் வீட்டிலேயே செய்யலாம்...

      நன்றி ஐயா

      Delete
  5. nydailynews - எனும் பயனுள்ள தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  6. அட...! எதுவுமே வேஸ்ட் இல்லை...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அட...! எதுவுமே வேஸ்ட் இல்லை..//

      ஆம் சகோ உண்மை தான்

      Delete
  7. Today : http://dindiguldhanabalan.blogspot.com/2015/01/The-Art-of-Hand.html

    ReplyDelete
  8. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. பயன்மிக்க தகவல் உமையாள்.நன்றி

    ReplyDelete
  10. புதிதாக கேள்விப்படுகிறேன். நாலல் பயனுள்ள தகவல்

    ReplyDelete
  11. பயனுள்ள பதிவுக்கு நன்றி.
    தமிழ் மணம் – ?

    ReplyDelete
  12. முன்பெல்லாம் குழந்தைகளுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சினை என்றால் மருத்துவர்கள் வே கொடுக்கச் சொல்வர் என அறிகிறேன்.ஆனால் இப்போது இல்லை போலும்.

    ReplyDelete
  13. ஆம் சகோதரி வே வாட்டர் மிகவும் சத்துள்ளது. நீங்கள் சொல்லி இருப்பது போல் செய்யலாம். மட்டுமல்ல, அதை வெளியில் ஓரிரு நாட்கள் வைத்து புளிக்க வைத்து ஃபெர்மென்ட் ஆனவுடன் ஃப்ரிட்ஜில் வைத்து இந்த வாட்டரை உபயோகப்படுத்தி பால் திரிய வைத்து ரசகுல்லா செய்வதுதான் பெங்காலியரின் வழக்கம். எனவே அவர்களது வீட்டில் வே வாட்டர் இருந்து கொண்டே இருக்கும். பாலைத் த்ரிய வைத்த பனீரை ரசகுல்லா செய்ய எடுத்துக் கொண்டு வாட்டரை மீண்டும் புளிக்க வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுவார்கள் அடுத்த முறை ரசகுல்லா செய்ய. நன்றி! -- கீதா

    ReplyDelete
  14. ஆஹா நல்ல விடயம் மிக்க நன்றி ..!

    ReplyDelete