Friday 23 January 2015

பிரஷாந்தம்...பிரகாஷம்...!!!





வந்த வழி வாயிலாக
வழியனுப்பினேன் எண்ணங்களை

எண்ணிலடங்கா முறை
படையெடுத்தாலும்
கண்டு கொள்ளவில்லை

எட்டி எட்டி பார்த்த(து)
எண்ணங்கள் எமாந்து போயின

உட்புகாததால்
உளம் நன்றாயின...

தலையின் நெருக்கடியாம்
தலையாயப் பிரச்சனை...
களையறுப்பால்
காணாமல் போனது

இறந்த சித்தனையின்
இறவாத தொந்தரவு
அப்பப்பா...தொலைந்து போயின தொலை தூரம்...
திருந்தாமல் இருக்க வேண்டும்
திரும்பி வந்தாலும்...

மூளையில் முளைத்தது
முத்தான சிந்தனை
முகத்தில் தவழ்ந்தது
முறையான புன்னகை...
                                 
நிஜப் புன்னகை நிறைந்தது
நிலவாய் ஒளி வீசியது
பிரஷாந்தம்...பிரகாஷம்...!!!




படம் கூகுள் நன்றி




11 comments:


  1. "மூளையில் முளைத்தது
    முத்தான சிந்தனை
    முகத்தில் தவழ்ந்தது
    முறையான புன்னகை..." என
    வாசகர் உள்ளத்தை ஈர்த்த
    சிறந்த பாவரிகள்

    யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

    ReplyDelete
  2. ஸூப்பர், ஸூப்பர், ஸூப்பர்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. "//மூளையில் முளைத்தது
    முத்தான சிந்தனை
    முகத்தில் தவழ்ந்தது
    முறையான புன்னகை...//"

    இப்படி இருந்தால் தான் முறையான புன்னகை வருமா... அருமை. அருமை.

    ReplyDelete
  4. இத்தனை பதிவுகளை மிஸ் செய்திருமீன்றோம்...அருமை!

    ReplyDelete