Wednesday 1 July 2015

அவன் தாள்.....








திருமால் அவன்பால் மனதை இழுத்தான்
அருள்வான் அவந்தான் அடைய அழைப்பான்
நெடுமால் கிடந்தான் நொடியில் இழுத்தான்
நெடிய சமயம் அருகே கிடந்தேன்
அழகே உருவாய் வரதன் வரவே
வணங்கி  பணிந்தேன் தாள்




படம் கூகுள் நன்றி
பா  தந்த  நாதா  நன்றி


17 comments:

  1. பள்ளிகொண்ட பெருமாள் படமும், பாடலும் மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது. :)

    அவன் தாள் பணிவோம்.

    ReplyDelete
  2. வணக்கம்
    படமும் கருத்தும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பணிகிறேன் நானும்.

    ReplyDelete
  4. படம் வெகு அழகுங்க.. பாடலும் சிறப்பு.

    ReplyDelete
  5. வேங்கடநாதன் பாதம் பணியும் பாடல் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வணக்கம் சகோ !

    இடத்துக் கேற்ப நடக்கின்ற
    ..............இதயத் தறிவைப் போல்நன்றே
    படத்துக் கேற்ற பாடலினை
    ..............படிக்கத் தந்தாய் மகிழ்கின்றேன்
    புடத்தை உண்டே புதுத்தங்கம்
    .............பொலிவைப் பெறுதல் அதுபோல
    இடரைக் காட்டும் இலக்கணங்கள்
    .............இனிக்கக் கற்றால் பாமணக்கும் !

    அருமை சகோ வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. "திருமால் அவன்பால்
    பணிந்தேன் தாள்" என்பேன்
    சிறந்த பக்திப் பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  8. வணக்கம்,
    அழகிய படம், அருமையான பாடல்,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
  9. படமும் பாவும் அருமை!
    த ம 6

    ReplyDelete
  10. அவன் தாள் போற்றி...போற்றி...அருமை!

    ReplyDelete
  11. பெருமாளும் பாடலும் அருமை சகோதரி.

    ReplyDelete
  12. மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்!


    த ம 7

    ReplyDelete
  13. என் இல்லத்தின் பெயரே திருவேங்கிட அகம்!

    ReplyDelete
  14. அருமை.

    பாராட்டுகள்.

    ReplyDelete