Tuesday 31 March 2015

புதினா ரசம்

புதிய வகை
புதினா ரசம்...!!!

புகுந்து கொள்ளும் வாசம்
புன்னகைக்கும் வீடு முழுதும்

எட்டி பார்த்த வயிற்றுக்கு
ஏக்கம் நீக்கி தணிக்கும்

முகர்ந்து பார்த்த மூக்கோ
முனங்கிடும் வயிற்றைப் பார்த்து

விருந்துண்ட விருந்தினரோ
வரவா மற்றொரு நாள் என்பர்

பார்த்துக் கொள்ளுங்கள்...
பண்பான நண்பர்களே...

ருசித்த கதை கேட்க
ருசித்து நானும் காத்திருக்கேன்.



Sunday 29 March 2015

உருளைக்கிழங்கு பொரியல்


உ.கிழங்கு பொரியல் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. சட்டுன்னு செய்திடலாம். இது சாம்பார், ரசம், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு என நல்ல காம்பினேஷனாக இருக்கும். ஆல் ரவுண்டர்...!!!

இது எல்லோரும் செய்வது தான். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொரியல் இல்ல....?

சும்மா...நானும் இன்று செய்தேன்...அதாங்க உங்களுக்கும் கொடுக்கலாம், எவ்வளவு நாளாச்சு...? அப்படின்னு வந்தேன்.....  




Thursday 26 March 2015

நலவிரும்பி




உன் திருவடி தொழுதிட நினைத்திட்டாலும்
மனமது அலைபாயாமல் நிற்கவில்லை
உன்னுரு கண்முன் நின்றாலும் கூட
மனமது மிதந்து ஏந்தான் செல்கிறதோ

Saturday 14 March 2015

மிதமான விடியல்




காலைல இருந்து ஒரே சோம்பேறித்தனமாக இருக்கிறது. வேலை ஓடவில்லை. ஹாயா...அப்படியே ஏகாந்தமா இருக்கனும் போல இருக்கு ஆனா முடியுமா....டிபன் சாப்பாடு என செய்ய வேண்டுமே. ஒருநாள் ஒரே ஒரு நாள் நமக்கு லீவு கிடைத்தால் எம்புட்டு சந்தோஷமாக இருக்கும்..ம்....


நீர் கொழுக்கட்டை





Wednesday 11 March 2015

நோக்கு பொருள்





வெட்டியாய்
விட்டத்தை நோக்குகையில்...
விரிந்தது ஒரு கவிதை
எதை நோக்குகிறாய்...என

Thursday 5 March 2015

சீரக ரசம்



மருத்துவ குணம் நிறைந்த சீரகம்

சீரகம் மலத்தை கட்டும், புத்திக்கு பலன் தந்து ஞாபக சக்தியை பெருக்கும். கருப்பையை தூய்மைப்படுத்தும். விந்துவை வளர்க்கும், உடல்வலியும் வனப்பு பெறச்செய்யும். உணவுக்கு சுவையுண்டாக்கும். கண்களுக்கு குளிர்ச்சிதரும், வெறிநோய் (இன்சேன்டி) குணமாகும். குருதிக்கழிச்சல் என்னும் ரத்த பேதி குணமாகும். வாய்நோய்கள் அனைத்தையும் போக்கும்.
ஈரலை பலப்படுத்தும் கல்லடைப்பு எங்கிருந்தாலும் அதை வெளி த்தள்ள உதவும். வாயுவால் ஏற்படுகின்ற நோய்கள். மூக்கு சம்பந்தப்பட்ட நோய்கள். பித்த சம்பந்தப்பட்ட நோய்கள், கண் சூடு, எரிச்சல் ஆகியவை குணமாவதுடன் உடல் பலம் பெறும். பித்த வாந்தி, சுவையின்மை, வயிற்றுவலி, வாய்நோய், கெட்டிபட்டசளி, ரத்தபேதி, இரைப்பு, இருமல், கல்லடைப்பு, கண் எரிச்சல் ஆகியவற்றை போக்கும்.

கிருஷ்ணப்பாவை - 1



Wednesday 4 March 2015

குதிரைக் கண்

கவிதை  தலைப்பில்  பதிவு 50....
அட பரவாயில்லையே...!!!





முடியுமென்கிற...
நினைப்பும் கனவும்
நாலடி முன்னே 
நடத்திச் செல்லும்...

Monday 2 March 2015

வாழ்க்கை வசப்படும்




பரிதாபத்தை எதிர் பார்த்தான்...
பரிதாபம் கிடைத்தது
மகிழ்ந்து போனான்...