Thursday 25 February 2016

மூச்சே நீயாய்




செய்கைகள் யாவும் தந்தவன் நீயே
செய்விக்க உடனிருப்பதும்  நீயே
நான் நான் என்றதை அறுத்ததும் நீயே
நாந்தான் என்பதை காட்டியதும் நீயே
மூச்சினில் கலந்து இருப்பதும் நீயே
மூச்சே நீயாய் ஆனதும் நீயே
மனப்பாலையில் கடப்பது சிரமம்
மகேசன் வழிகாட்டிட நடப்பது இன்பம்
சொற்கள் உளியில் சிதறுவதால்
சொர்ண நின்னுருவம் கண்டேன்
புறணித்த வாய் புறம் தள்ளிட
புண்ணியன் உன்னை கண்டேன்
உளியின் அடிகள் கல்லின் உண்மைக்கு
உள்ளத்தின் சிரமம் மெய் நம் நன்மைக்கே
கண்ணன் சொன்னான் கடமை செய்யென்று
கண்ணாய் காப்பேன் உம்மை நானென்றும்







10 comments:

  1. வியாழன் ஸ்பெஷல். ஓம் ஶ்ரீ ஸாயி ராம்.

    ReplyDelete
  2. சாய் மூச்சாய் நீ
    சாய் மூச்சாய் நீ
    சாய் மூச்சாய் நீ

    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. வணக்கம்

    சாயி பற்றி போற்றிய பாடல் சிறப்பு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. இரசித்தும் உணர்ந்தும் படித்தேன்
    அமைதி தந்தது
    அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தாம்தமாகிவிட்டது. பாடல் அருமை சகோ..

    ReplyDelete
  6. ஒம் சாய்ராம்
    ஜெய் சாய்ராம்

    அருமையான பா/கவிதை வரிகள்

    ReplyDelete