Thursday 18 February 2016

உள் வேள்வி ஒன்று உதிக்கவே

ஓம் நமசிவாய சாயி
ஓம் நமோ நாராயணா சாயி




உன் முகம் கண்டு உருகினேன்
உள் முகம் கண்டு நாணினேன்
என்  செய்தேன் உனை பெற்றிட
எள்ளளவும் நான் செய்யவில்லையே
கண்களால் கட்டி போட்டிட்டு
கரம் பிடித்து கூட்டிப் போகிறாய்
உள் வேள்வி ஒன்று உதிக்கவே
உள்ளமது உஷ்ணத்தில் துடிக்குதே
உழன்ற உணர்வுகள் வேள்வியில்
அர்பணம் ஆகி கருகுதே
மெளனத்தினாழம் காணு மாசையில்
பிச்சுபிச்சு  என்னை  காட்டுதே
பட்டபகலின் வெளிச்சமோ  அதை
பரிகாசம் செய்து  கண் சிமிட்டுதே
அர்த்தமற்ற மொழி விட்டிட
அமைதி என்னுள் குடிகொள்ளுதே
நம்மை நாம் காணுகையில்
நாளும் நாவடங்கிப் போகுதே
சாயிசாயி என்றிடவே
சகலமும் அதில் அடங்குதே




படம் கூகுள் நன்றி.




15 comments:

  1. ஓம் நமசிவாய !
    ஓம் நமோ நாராயணா !!

    ReplyDelete
  2. ஓம் ஶ்ரீ சாயிராம்.

    ReplyDelete
  3. சாய் சரணம்
    சாய் சரணம்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  4. அருமையான பாமாலை. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. ஓம் நமசிவாய...
    ஓம் நமோ நாராயணா...

    ReplyDelete
  6. சாயி சாயி என்றிடவே
    சகலமும் உன்னுள் அடங்குதே...!

    ReplyDelete
  7. ஒம் சாய்ராம்

    ReplyDelete