Saturday 20 August 2016

வாழ்விதுவே...






மனம் தேடும்
மலரும் நினைவுகள்
நெஞ்சுக்குள் புதைந்திருக்க...

மனமழும் வேளையில்
கிளுகிளுப்பை காட்ட
மிதந்து வரும் காட்சிகள்...

மனமூச்சு முட்டமுட்ட
கருவிழிகளில் கருமை நீரூற்றுகள்
கரைபுரள வரும் வேளையில்
கரையுது மனம் அதநூடே...

இவ்வுலகு மறந்து பறந்து
அவ்வுலகு புகுந்து களித்திடவே
இவ்வுலகை சில நாட்கள் கழிக்க
சக்தி தந்ததுவே...


கலங்கிய குட்டை தெளியும்
மீண்டும் கலங்கும்
நீர் வற்றும் வரை
உயிர் நீர் பறந்து மேலே...
மழை நீராய் மீண்டுமுயிர்க்கும்...
வாழ்விதுவே.



7 comments:

  1. என்றென்றும் நல்வாழ்த்துகளால் நிறையட்டும் நமது வாழ்வு!..

    ReplyDelete
  2. ஏதோ மனக்கஷ்டம் என்று புரிகிறது.

    ReplyDelete
  3. ஒரு குட்டியூண்டு கருப்புப் பூனையே
    நமக்குக் குறுக்கே வராமல்,
    உச்சியில் ஏறி நிலவைப் பிடிக்க முயற்சிக்கும்
    இன்றைய விஞ்ஞான யுகத்தில் .....

    இனி ‘வாழ்விதுவே’ என்ற விரக்தி எதற்கு?

    கவிதை அருமை. பாராட்டுகள்.

    வெற்றிமேல் வெற்றி கிட்டிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அருமையான கவிதை...

    மீண்டும் உயிர்க்கலாம்....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான பா வரிகள்
    தொடருங்கள்
    தொடருவோம்

    ReplyDelete
  6. அருமையாக இருக்கிறது...உங்கள் மனதில் வருத்தம்?? மீண்டும் உயிர்க்கட்டும் நல்வாழ்த்துகளுடனும், எண்ணங்களுடனும்!

    ReplyDelete