Thursday 22 January 2015

குழல் நாதம்







நீயூதும்  குழல்நாதம்  என்  செவியில்
நீங்காதுஇ  சைத்திடவே  தினம்  நாளும்
மதிமயங்கிகி  டந்திடவே  ஞானம்  வேண்டும்
மாதவா நீகுழல்  ஊது

சிறுமுறுவல்  காட்டிநீ யோடவே  ண்டாம்
சிற்றின்பம் காட்டிநீ  போகவே  ண்டாம்
சிதையாத  ரூபம்  சிலநிமிடம் காட்டு
சின்னவள் மனம்  குளிர 

வெள்ளமென  மனசக்தி பொங்  கியோட
வெண்பாக்கள்  பூமாலை  யாகியுன்  மேனிதழுவ
ஆரவாரமற்  றமனக்காட்டில்  நீஉறைய  வேவா
ஆலிலைக் கிடக்கும் நாதா.



கிருஷ்ணார்ப்பணம்...!!!


படம் கூகுள் நன்றி.






16 comments:


  1. சிதையாத ரூபம் சிலநிமிடம் வந்தேன்
    சீருமையாளின் உளம் குளிர நின்றேன்
    ஆலிலைக் கிடக்கும் குழலூதும் கண்ணன்
    ஆழ்கடலமுதம் அளிதேன் நன்று!
    (கண்ணன் அருளியதாக பொருள் கொள்க!)
    இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  3. அருமையான குழல் நாதம். தொடரட்டும் தங்களின் இந்த நாதங்கள்.

    ReplyDelete
  4. வணக்கம்
    வரிகள் நன்று இரசித்தேன் த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. குழலூதும் கண்ணன் கானமிசைத்தால் குறையேது நமக்கு?

    ReplyDelete
  6. அருமையான பாக்கள் தோழி கண்ணனுக்கு அன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  7. குழலின் நாதம் அருமை புகைப்படமும்கூட...
    தமிழ் மணம் 4

    ReplyDelete