Saturday 26 October 2013

சூயஸ் கால்வாய் கவிதை - 1




படகு ஓடும் வீதி 
பார்த்ததுண்டோ சொல்வீர் ?

கப்பல்கள் சீறிப்பாயும் 
கால்வாயைக் கண்டதுண்டா ?


கனத்த கப்பல்கள் கண்டங்களைக் கடக்கும் 
கால்வாயும் இதுதான் .....

சொகுசுக் கப்பல்கள் சுற்றாமல் சுற்றும் 
சுகவாசல் இது தான் .....

மரக்கலங்களின் அணிவகுப்பு
மன்னர்காலத்து பரிசளிப்பு .....

மறைந்து இருக்கம் வரலாறு
மக்களுக்குத் தெரியாது .....

சுகமாய் ஒரு கால்வாய்
சூயஸ் கால்வாய் .....

முன்னோர்களுக்கு
முத்தாய் ஒரு வணக்கம்
முயற்சிக்கு முன்னோர்கள்
என்றும் ஒரு எடுத்துக்காட்டு .....!!!!!!!





ஆர்.உமையாள் காயத்ரி.



1 comment:

  1. முதல் பகிர்வே கவிதை.அருமையாக எழுதியிருக்கிறீங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete