Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, 11 October 2019

ஆன்மா பிரிவதும் சேருவதும்/அனுபவம்

அப்பப்பா...இந்த பக்கம் வந்து எவ்வளவு நாள் ஆச்சு...
என்ன நண்பர்களே...எல்லோரும் நலமா....?


இன்று எனக்கு ஒரு புது விதமான...அனுபவம்...


தினமும் நாம் இரவில் தூங்கும் போது நம் ஆன்மா வெளியில போயிட்டு உடம்பில் வந்து சேரும் அப்படின்னு நாம கேள்விப்பட்டு இருப்போம்.
ஆகையால் தான் தூங்குபவர்களை அவசரமா எழுப்பக்கூடாதுன்னு சொல்லுவார்கள். நாம் அவசரமாக எழுப்பினால் வெளியில போன ஆன்மா அவசரமாக உடம்பில் தாறுமாறாக புகும். ஆகையால் சில பின் விளைவுகள் வரும் என்று படித்து இருக்கிறேன்.  இதைப் பற்றி மிகவும் விலாவாரியாக அலசாமல் ... இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.


Friday, 15 January 2016

பொங்கலோ...பொங்கல்...!!!


அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்...

பொங்கல் எல்லாம் நல்லா சாப்பிட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.


Thursday, 4 December 2014

லிப்ட் - 2



மேலே சென்றது இப்போ கீழ் தளத்துக்கு வந்து விட்டது. அப்போது கதவு திறந்தது….ஆஹா..வெளியில போகலாம் என நினைக்கும் போது தான்…..ஆ…. அப்படியே எனக்கு பயம் உச்சிக்கு போய் விட்டது.

லிப்ட் - 1 - படிக்காதவர்கள் இதை கிளிக் செய்து படித்து விட்டு தொடருங்கள்...

Tuesday, 2 December 2014

லிப்ட் - 1



மாலை வேளை…
அந்த 8 மாடி கட்டடம் முன்பாக டாக்ஸி வந்து நின்றது.  அதிலிருந்து நால்வர் இறங்கினர். பாவம் அப்போது அவர்களுக்கு தெரியாது கொஞ்ச நேரத்தில் நமக்கு வாழ்நாள் மறக்க முடியாத ஒர் அனுபவம் கிடைக்கும் என்று.

கணவன், மனைவி, கல்லூரி செல்லும் அவர்களது இளைய மகள் மற்றும் அதே கட்டடத்தில் வசிக்கும் நண்பரின் மனைவி. இவர்களே அந்த நால்வர்.

Tuesday, 18 November 2014

பொழுது புலர்ந்தது…!!!


           பறவைகளின்  க்ரீச்..  க்ரீச்…  சத்தம்.  பொழுது  புலர்கிறது. அதிகாலை வேளையில்  அச்சத்தம்  இனிமையாக  கேட்கிறது. விழித்தும்  எழ மனமில்லாமல்  பறவைகளின்  அந்நாளின் வரவேற்பைக் கேட்டவண்ணம்  படுத்துக்  கிடப்பது  தனி  சுகம். விடுமுறை நாள் என்றால்  கேட்கவே  வேண்டாம்.


Thursday, 13 November 2014

இலயிப்போமா....!!!


பாடல்கள் சிலவற்றை நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும்

நாமாவளி பாடல்கள் நம் மனதை கரைத்து விடும்.

அதன் இனிமையை சுவைத்து தான் உணரமுடியும்.

கேளுங்களேன் ...


Sunday, 2 November 2014

தண்ணீர் இல்லாமல் எப்படி காம்பெளண்ட் கட்டுவது

வீடு கட்ட இடம் வாங்கியாச்சு. போர் போட வேண்டும் அல்லவா…?
பூமிக்குள் எங்கே தண்ணீர் இருக்குன்னு பார்க்க போர் ஆபீஸில் இருந்து ஆளைக் கூட்டிக் கொண்டு போனேன். அவர் இடத்துப் பக்கத்தில் ஒரு மரக்கிளையை எடுத்துக் கொண்டு கவட்டைப்புல் அடித்து விளையாடுவோமே அது மாதிரி உடைத்துக் கொண்டார்.

Sunday, 19 October 2014

இந்நாள் வரை தெரியவில்லையே...?


 எதுவும் தெரியவில்லை என உணர இத்தனை ஆண்டுகள்               

ஆகிவிட்டனவே..!  பராபரமே....


Friday, 10 October 2014

மெளன மொழி...!!!




பேச்சு பேச்சு பேச்சு…சில சமயங்களில் நாம் எதுக்காக பேசுகிறோம்..என்னத்தை பேசுகிறோம்ன்னு தெரியாமலேயே பேசிட்டே இருப்போம். பேசுவது நமக்கு பிடித்து இருக்கிறது…ஆனா கேட்கப் பிடிக்காது. நாம பேசுவதை அடுத்தவன் கேட்கிறப்போ அவன் பேசுவதை நாம கேட்கணும் அப்படிங்கிற மரியாதை எல்லாம் கிடையாது. நாம பேச வேண்டும் அடுத்தவன் கேட்கணும். நமக்குத்தான் எல்லாம் தெரிந்தது போல ஒரு நினைப்பு… அடுத்தவனுக்கு அவ்வளவு தெரியாதுன்னு நாம நினைக்கிறோம், நம்புகிறேம்.

Sunday, 27 July 2014

மிதி வண்டி



மிதி வண்டி

இந்த மிதி வண்டி வாட்டர் கலரில் வரைந்தது. வாட்டர் கலர் கைப்பழக்கம் வரவேண்டும் என்பதற்காக வரைந்தேன்.

Thursday, 10 April 2014

ஆவி….. பிடித்தல்….!!!




என்னங்க தலைப்பே வித்தியாசமாயில்ல… என்ன செய்கிறது அது அதுக்கு வேளை வந்துடுச்சுன்னா ஒன்னும் செய்ய முடியாது. பயந்திடாதீங்க….! சும்மா ஒரு ரவுண்டு போகலாம்.

Tuesday, 1 April 2014

மின்சாரக் கண்ணா…!




மின்சாரம் போய்விட்டது. உடனே என்ன செய்வது என்கிற கேள்வி வந்துவிடுகிறது. அது இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை.

Saturday, 11 January 2014

நேசம்



மரம் செடிகளுடன் பேசி இருக்கிறீர்களா? என்னடா…இது…? மனுசங்க கூட பேசுவோம்…. மரம் செடி கொடின்னு தோனுது இல்ல…!





மனுசங்க கிட்ட நாம பேசும் போது சில சமயம் கேட்பாங்க…. சில சமயம் கேட்பது போல பாவலா பன்னுவாங்க…. சில நேரத்தில் எடக்கு மடக்கா பேசி ஏன்டா… இவுங்க கிட்ட பேசினோம்னு பீல் பன்ன வச்சிடுவாங்க… இல்ல. இது எல்லாருக்கும் எப்பவாவது கண்டிப்பா நடந்து இருக்கும். என்னங்க நான் சொல்வது. அதற்காக நாம் நம்மினத்தோட பேசாமலா இருக்க முடியும்….?

Saturday, 14 December 2013

குளிர்






இரும்பு அறையை  துளையிடும் வல்லமை உண்டு குளிருக்கு. இதமான AC யின் குளிர் எங்கே?   இதயம் ஆட்டும் இயற்கையின் குளிர் எங்கே?   குளிர்கால வேட்டை தொடங்கிவிட்டது.

 மேகப் படையினரின் அணிவகுப்பு கலையாதா என ஒர் ஏக்கம். ஆனால் புதிது புதிதாக மேகப் படையினர் வந்த வண்ணம். கோபத்தால் அவர்களின் முகங்களோ கருமை பூசிக்கொண்டன. கர்ஜனைகள் இடித்தன, சிரிப்போ மின்னின.   சண்டையின் சப்தங்கள் மழையாய் பொழிந்தன.