Thursday 31 October 2013

"சாய் பாமாலை "-1

                                எழுது கோலால் நான் வரைந்த சாய் பாபா படம்



 பாடல் - 1

சாய்ரூபதரிசனம்  சன்னதி  இன்றியும்  கிடைத்திடும்
நாமஸ்மரணை  செய்திடில்  நாளும்நற்கதி  கிடைத்திடும்
கண்கள்இரண்டும்  காணவே  கருணைமூர்த்தி  அமர்ந்திட்டார்
காலம்நம்மை  இழுத்துச்செல்லும்  காலடிசரணம்  செய்யவே

அவர்வலையில்  விழுந்துவிட்டால்  எழுவதென்பதியலுமோ?
கர்ப்பவாசம்  தந்துவிட்டார்  உலகின்தாய்  இவரன்றோ?
சாய்சாய்  என்றிடில்  சாவும்நோயும்  பயமில்லை
இங்குஅங்கு  தாவினாலும்  நூலின்பிடி  அவர்வசம்

குருவின்பாடம்  நடந்திடும்  வகுப்பறை  தேவையில்லை
குருகடாக்க்ஷம்  பெற்றிருந்தும்  பூரணத்துவம்  உணரவில்லை
உள்மொழியில்  பேசிடுவார்  உணர்ந்திடச் செய்திடுவார்
அரண்மனை  காவலிலே  இரஜபோகவாழ்வு  தருவார்


ஆர்.உமையாள் காயத்ரி.


No comments:

Post a Comment