Thursday 30 April 2015

நானாக நான் இல்லை






கண்கள் நிறைந்தன உன் தரிசனத்தால்
நானாக நான் இல்லை அப்போது சாயி
குரு நீயென திடமான மனதின் போக்கு
குருவின் அருகாமையை உணர்த்திடும் நாளும்
கூர்வாளாய் என்னுள் நீ இறங்கி விட்டதால்
வழிந்தோடும் இரத்தம் உன் பெயர் இசைத்தது
வலியது இன்றி வாழ்க்கையின் செயல்கள்
வந்தனம் பாடி உன்பின் வந்தது






படம் கூகுள் நன்றி
பாடல் தந்த சாய்க்கு நன்றி



27 comments:

  1. சிறப்பான பாடல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி.

    நலமா? என் கண்களும் நிறைந்தன நீண்ட நாள் சென்று தங்கள் சாய் பாமாலை கண்டு. சாய்பாபாவின் பாமாலை இனித்தது. அந்த குருவின் அருளால் இவ்வுலகில் அனைவருக்கும் அனைத்துமே இனிதாக நடக்க நானும் சாயின் பாதங்களைப் பற்றித் தொழுகிறேன்
    அவரின் அருள் உலகத்தனைக்கும் பூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்..நன்றி சகோதரி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நலம் சகோ. என் மனமும் நிறைந்தது.நன்றி

      Delete
  3. வருக.. வருக.. வெகு நாட்களுக்குப் பிறகு இனிய பதிவு..

    சாய் நாதன் துணையிருக்க சஞ்சலங்கள் இல்லை!..
    சாய் சரணம்.. சரணம்.. சரணம்..

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா. வெகுநாட்கள் ஆகிவிட்டன.

      சாய் நாதன் துணையிருக்க சஞ்சலங்கள் இல்லை!..//

      முற்றிலும் உண்மை. சாய்ராம் சாய்ராம்

      Delete
  4. வந்தனம் பாடி வந்த இசை
    எந்தன் சாய் நின்ற திசை
    உந்து சக்தி தந்த விசை

    சிந்துநதி யே எம் சாயே!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. சகோவின் மீள் வருகையை வரவேற்கிறேன் தொடரட்டும் சாய் பாமாலை.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  6. சகோ நலமா ? மீண்டும் உங்களின் பதிவை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தொடரட்டும் உங்கள் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நலம் சகோ மிக்க நன்றி

      Delete
  7. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய உழைப்பாளர் தினம் சகோ. நன்றி

      Delete
  8. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  9. வியாழன் இன்று. சாய் கோவிலுக்கு என் மனைவியுடன் சென்று இருந்தேன்.

    தலை குனிந்து அவள் சாயி பகவானின் பாதங்களை வணங்கியபோது அவள் மேல் புஷ்பம் ஒன்று விழுந்தது.

    வீட்டுக்கு வந்து என் ஐ. பாட் திறந்தேன். நான் பாடவேண்டும் என்றே சாயி பகவான் உமையாள் காயத்ரி அவர்களைப் பாடல் எழுதித் தர போலும்.

    காயத்ரி உமையாள் அவர்களுக்கு என்றுமே சாயி அருள் உண்டு.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. சாயின் அருள் பூரணமாய் பெற்ற ஐயாவின் பாடல்...கேட்டு கண்கள் கசிந்தன. மிக்க நன்றி தாத்தா

      Delete
  10. குருவாரத்திற்கேற்ற பதிவு .......
    அதனால்
    வந்தனம் பாடி உன்பின் வந்தது
    இந்த என் பின்னூட்டமும்

    ReplyDelete
  11. அட நீண்ட நாட்களின் வருகை மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது.ம்..ம்..ம் இப்படி அசத்திவிட்டீர்களே சாயியை ம்..ம் புத்துணர்ச்சி யோடு படையுங்கள் பதிவுகளை இனி நாமும் அசர வாழ்த்துக்கள் தோழி .... !

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோ உங்கள் எல்லோரையும் கண்டது. வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ

      Delete
  12. அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. வழக்கம் போல அருமையான கவிதை, அழகான புகைப்படத்துடன்.

    ReplyDelete
  14. நலம்தானே உமையாள். நீண்ட இடைவெளிக்கு பின். சாய் யின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.
    அழகான படம். அருமையான படைப்பு.

    ReplyDelete
    Replies
    1. நலம் சகோ. மிக்க நன்றி

      Delete