Monday 30 December 2013

என்னுள் நான் - கவிதை - 7

கவிதை -7

வனப்  பாதையிலே
வாகனம்  செல்கையிலே
இதமான  குளிர்காற்று
இருக்கி  அணைக்கையிலே

பசுங்குகையினிலே – மனசு
பாழாய்ப்  போகிறது
மரமும்  கொடியும்
மனசாகிப்  போகிறது

இளவெயில்  படுகையிலே
இளந்தளிர்  பார்ப்பதென்ன
முத்தான  பனித்துளிர்
முழியை  உருட்டி
முகம்  பார்ப்பதென்ன

சாரலாய்  மழைத்தூரல்
சங்கமித்த  சரீரமோ ... அப்பா … !
ஈரமாய்  போனது
மலை மட்டுமல்ல
மனசும்  கூடத்தான் ...
 
காலின்  ஜில்லிப்பு
தலை வரை நழுவி
மலை முகடு தலை நோக்க
மரக்குடை மறைப்பதென்ன

சலசலப்பாய்  நீரோட்டம்
வெண்கோடாய்  கீழ்நெளிய
பயமும்  பதை பதைப்புமாய்
பார்க்கையிலே  பறக்குது மனசு

சீரான அமைதியின் – ஊடே
சிலசில சப்தங்கள் …
ஆனந்த  அமைதியிலே
கரைந்து  போனேன்
என்னுள்  நான்.





ஆர். உமையாள் காயத்ரி.











No comments:

Post a Comment