Thursday 30 July 2015

பித்தா நீயே பிடித்துக் கொண்டாய்...!!!

பாமாலை  -  400....?



சாய் பூர்ணிமா நாளின்று
சங்கடங்கள் கரையும் தானின்றி
சங்கல்பம் கொள்வோம் சரண்புகவே
சாய்மடி யுண்டு சாய்ந்திடவே

சமநிலை உள்வாங்கச் செய்தாயே
சலன மாடாமல் ஆள்ந்தாயே
சருகா யானாலும் உணவிடலாம்
சாகும் போதும் பயன் தருமே

உன்மெய்யே மெய்யென உணர்ந்தேனே
உன்மெய் மறைந்துமுடன் வசிக்கிறாயே
உன்னுள் மூழ்கி எனக்கண்டேன்
உன்னடி நீங்கா உய்த்துவிடு

உலகம் நீயேயானாய் எனக்கு
உன்னைச் சுற்றிநான் வந்தேன்
என்னைச் சுற்றி நீவந்தாய்
என்னில் நீ உன்னில் நான்

விரலினோடு விரல் பின்ன
விருப்பம் கொண்டு உடன்வந்தேன்
சிறுமியாய் நான்மாறி உன்னுடன்
சிந்தனை யில்லாமல் சுற்றிவந்தேன்

பிடித்தது எனக்கு இச்செய்கை
பிடிவாதம் வேண்டு  மருள்வாயோ
பித்தா நீயே பிடித்துக் கொண்டாய்
பித்தா யானேன் உன்மேலே.




400 - வது பதிவு இது.....உங்கள் அனைவரின் அன்பான  வருகையாலும், கருத்தாலும், உற்சாகப்படுத்துதலாலும் தான் என்னால் இவ்வளவு பதிவுகள் இடமுடிந்தது. உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த என் நன்றிகள். சில கால இடைவெளிக்குப் பின் மீண்டும் காணலாம்.





31 comments:

  1. அருமையானதோர் பாமாலை......

    400-வது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். இன்று தான் நானும் எனது 900-வது பதிவினை வெளியிட்டேன்! :)

    த.ம. 2

    ReplyDelete
  2. அருமை...

    400 - மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. 400-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. 400 – ஆவது பதிவு. சகோதரியின் சாதனைக்கு வாழ்த்துக்கள்.
    த.ம.4

    ReplyDelete
  5. நானூறாவது பதிவிற்கு நல்வாழ்த்துகள்!..

    நலங்கொண்டு வாழ்க நாளும்!..

    ReplyDelete
  6. அருமையான கவிதை. 400 இன்னும் பல கோடிப்பதிவாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அருமையான பாமாலை. 400 க்கு வாழ்த்துகள் உமா :)

    ReplyDelete
  8. பலநூறு பதிவுகளாய் பல்கிப் பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
    சாயி ராம் எல்லாம் அவன் அருளே ...!

    ReplyDelete
  9. சாயி நாமம் வாழ்க...
    அருமையானதோர் பாமலை அக்கா...
    400க்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும் தங்கள் எழுத்தின் பயணம்...

    ReplyDelete
  10. வணக்கம்,
    கவி வரிகள் அருமை,
    நலம் பல பெற்று
    நாலும் பல பதிவுகள் இட்டு,
    வளர வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  11. அழகிய பாமாலை.

    400 சீக்கிரமே 4000 ஆக வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வணக்கம்

    தங்களின் வலைதளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி.

    அருமையான வரிகளை கொண்டு நல்லதோர் சாய் பாமாலை வழங்கியமைக்கு நன்றி. படத்தின் தெய்வீகம் மனதை நிறைத்தது.

    400 வது பதிவுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி. மென்மேலும் தங்களது பதிவுகள் பெருகி சாதனை படைத்திட இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. அழகியா பா சகோதரி! அதுவும் ஸ்ரீசாய்நாதனுக்கு! 400 வது பதிவுக்கு வாழ்த்துகள்! தாங்கள் மேன்மேலும் பல ப்டைக்க எங்கள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. சென்ற வியாழன் பதிவுக்கு இந்த வியாழன் வருகை.
    சாய் துணை

    ReplyDelete

  16. ஐயா வணக்கம்!

    இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html

    ReplyDelete
  17. இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோ

    ReplyDelete

  18. 400 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்!
    சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/



    ReplyDelete
  19. வணக்கம் சகோ !

    நானூறாம் பதிவிற்கு என் நல்வாழ்த்துக்கள்
    காலம் தாழ்த்திய கருத்திற்கு வருந்துகிறேன்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete