Friday 8 January 2016

தீயடி உன் நிழல்...!






தீயடி உன் நிழல்
தீண்டிய போது நானோ தணல்
சட்டென திரும்பினாய்
சற்று முன் அக்கழுத்து வணங்கியிருக்கக்கூடாதா..?
 உய்த்திருப்பேன் நான் உயிரோடல்லவா...

தேடுகிறாயே இப்போது என்ன  உணர்வில்...
உன் முதுகில் பச்சை குத்திய
என் செந்தாமரை பேனாவின்
சேதியறிந்ததால் தானே சகியே..?

அலட்சிய ஆணவத்தில்
ஆளைக் கொன்றாயேயடி...
ஆவியான பின்னும் அலைகிறேனடி அறிவாயா...?

காதலுக்கு கண்கள்
கண்களிலோ காதல்
வழியுதடி அன்பு
வாரியெடுத்து  போடு செம்பில்

கரைத்துவிடு கங்கையில்
கரைக்க மாட்டேன் காதலை நான்
காத்திருப்பேன் கரையினிலே...
வாழ்க்கையை வாழ்ந்து விட்டு வா...
வானம் பாடியாய் திரிவோம் நாம்...


32 comments:

  1. அருமை சகோ அழகிய வரிகள் தொடர வாழ்த்துகள் ம்ம் இனி மொத்தமாக தினம் வரும் என்று ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. //தொடர வாழ்த்துகள்...//
      நன்றி சகோ...

      இனி மொத்தமாக தினம் வரும் என்று ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்..//

      இணையம் சரியாகவரவில்லை...ஆகையால்...சற்று சரியான பின் முயற்சிக்க வேண்டும்....நன்றி சகோ...

      Delete
  2. தீயடி உன் நிழல்...!

    படமும், பாடலும், அதில் உள்ள உணர்வுகளும் அருமையோ அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அருமையோ அருமை. பாராட்டுகள்.//

      மிக்க நன்றி ஐயா...உங்கள் இவ்வாக்கியம் மிகவும் மகிழ்ச்சியை வழங்குகிறது...

      Delete
  3. செத்து சுண்ணாம்பு ஆனபின்பும் , திருந்தாத காதலனை என்னதான் செய்வது :)

    ReplyDelete
    Replies
    1. ))))).....நம்மாள ஒன்னும் செய்ய முடியாது தான்....நன்றி சகோ

      Delete
  4. உங்களை உங்கள் பதிவுப்பக்கம் பார்த்தே ரொம்ப மாதங்கள் ஆச்சு.

    என் பதிவுகள் பக்கம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு.

    தங்களுக்கு என் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    புத்தாண்டு பிறந்த உடனேயே தீ பத்திக்கிச்சு ......

    ‘தீயடி உன் நிழல்...!’ என்ற தலைப்பில். வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்...

      வருஷம்...எல்லாம் இல்லை..மாதங்கள் தான்))))...ஐயா....ஆச்சு

      உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      உங்கள் தளம் வந்து திறந்து பர்த்தேன்...இணையம் எனக்கு சரியாக வராத காரணத்தால் திறக்கவில்லை. இது போல் பலருடைய தளங்களுக்கு என்னால் செல்ல இயலாத சூழ்நிலை...சிலருடைய தளம் திறந்தது...

      ஆகையால் நண்பர்கள் என்னடா இவள் நம் பக்கம் காணோமே என நினைக்க வேண்டாம் விரைவில் வருகிறேன் நண்பர்களே...

      Delete
  5. கரைத்துவிடு கங்கையில்
    கரைக்க மாட்டேன் காதலை நான்
    காத்திருப்பேன் கரையினிலே...
    வாழ்க்கையை வாழ்ந்து விட்டு வா...
    வானம் பாடியாய் திரிவோம் நாம்...

    கவிதை அருமை அக்கா..

    ReplyDelete

  6. தீயடி உன் நிழல்
    தீந்தமிழ் நின் நிஜம்
    மனதை சுட்டது மகத்தான வரிகள்.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலுய்

    ReplyDelete
  7. தேடுகிறாயே இப்போது என்ன உணர்வில்...
    உன் முதுகில் பச்சை குத்திய
    என் செந்தாமரை பேனாவின்
    சேதியறிந்ததால் தானே சகியே..?//

    நிழலும் தீயாய் திகுதிகுக்கும் பகிர்வுகள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா
      தாங்கள் உடல்நலம் தேறி வலைப் பக்கம் காண்கையில் ஆனந்தமாக இருக்கிறது அம்மா

      Delete
  8. முதல் வரியே அசத்துகிறது! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தலைப்பு அதிகம் ஈர்த்தது.

    ReplyDelete
  10. ஆவியின் காதலா?

    ReplyDelete
    Replies
    1. காதல்.....ஆவியன பின்பும் தொடர்கிறது..

      Delete
  11. நிழல் தீ நிஜமானாற் போலே,,,


    தொடர்கிறேன் சகோ.

    த ம +

    ReplyDelete
  12. ஆஹா அருமை. தாமதமாகிவிட்டது. இப்போது உங்கலை மெய்லிலும் தொடர்கின்றோம் இனி உங்கள் பதிவுகள் பெட்டிக்கே வந்துவிடுமே. மிஸ் ஆகாது. தலைப்பு சூப்பர் சகோ

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை சகோ....
      ஓ.......சரிசரி...
      நன்றி சகோ

      Delete
  13. சகோ நலமா? தலைப்பும் பதிவும் அருமை. எனது பதிவாகிய பனீர் குடமிளகாய் கிரேவியை ருசிக்க எனது தளத்திற்கு வாருங்கள்.

    ReplyDelete
  14. வணக்கம் சகோ, நலமா?
    ஆரம்பமே அமர்க்களமாய்,,,,, ம்ம்,
    அருமையான வரிகள், சரி ஓய்வு போதும், இனி தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

    ReplyDelete
  15. "காதலுக்கு கண்கள்
    கண்களிலோ காதல்
    வழியுதடி அன்பு
    வாரியெடுத்து போடு செம்பில்" என
    அழகுபட ஆக்கிய பாவரிகள்
    உள்ளத்தை ஈர்க்கிறதே!

    ReplyDelete
  16. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete