Monday 29 June 2015

உனக்குள் உன்னைப் பார் / கவிதை






தனித்திருக்கும் போது
தன் மனமளந்தேன்
அடிக்குள் அடங்கவில்லை
அண்டம் பற்றவில்லை
நொடிக் கொருபக்கம்
நெருக்கடி எனக்கு...?
எப்பக்கம் அளக்க...?

விடுவதாயில்லை
இசைந்தேன் அதற்கு
இழுத்த இழுப்புக் கொல்லாம்
பார்வையாளனாய் பார்த்தேன்
படித்தேன் என்னை

சாட்சி  கூறல்....
ஓ...மனசாட்சி
சுட்டு விரல் என்பக்கம்
இப்போது...

தெளிவடைய தெளிவடைய
மறைந்தன மறைந்தன....
ஆ...ஹா......இடம்  விசாலமாக இருக்கிறதே...
அப்பாடா...
எங்கோ குரல் கேட்க...
விழித்தேன்....

சற்று மூச்சு விட்டுக் கொள்கிறேன்...
மீண்டும் குரல்...

இப்போது பார் தெரிகிறேனா....?
ஆமாம் சாமி
உனக்குள் உன்னைப் பார்
நான் தெரிவேன் என்றும்.




19 comments:

  1. தியானத்தின் பாடம்.

    ReplyDelete
  2. அருமை... அருமை...

    நமக்குள்ளே தான் எல்லாம்...

    ReplyDelete
  3. //உனக்குள் உன்னைப் பார்
    நான் தெரிவேன் //

    அருமையாகத் தெரிகிறது ...... அதே போல இந்தத்தங்களின் ஆக்கமும். பாராட்டுகள். :)

    ReplyDelete
  4. அட, நமக்குள் தேடும் தியானம் உங்கள் கவியில் இன்னும் அருமையாய்!

    விலாசம் என்று இருப்பது விசாலம் என்று வருமோ தோழி?

    http://thaenmaduratamil.blogspot.com/2015/06/theeyil-mezhukaai-ainkurunooru-32.html
    நேரம் கிடைக்கும்பொழுது பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் , நன்றி

    ReplyDelete
  5. >>>உனக்குள் உன்னைப் பார்
    நான் தெரிவேன் என்றும்!...<<<

    அவ்வளவு தான்!..

    ReplyDelete
  6. உனக்குள் உன்னைப் பார் என்பதிலும் உனக்குள் என்னைப் பார் என்பதே சரியாய் இருக்கும் என்று தோன்றுகிறது. அல்லது எனக்குள் உன்னைப் பார் என்றாலும் சரி. மாற்றானின் கருத்துக்கள் புலப்படும் புரியும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நம் மனத்தின் எண்ணங்களை நாமே பார்வையாளராய் இருந்து கவனித்தால், பல விடயங்கள் தெளிவடையும். அழகான அர்த்தம் பொதிந்த கவிதை.

    பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
  8. நமக்குள் நம்மைத்தேடுவது சிரமமே. இருப்பினும் நல்ல கருத்தினைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. ஞானத் தேடலின் கனி.

    அருமை.

    தம 6

    ReplyDelete
  10. வணக்கம்

    கவிதையின் வரிகள் மனதை நெருடியது.. மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. ஆஹா அருமை தேடிக் கண்டதை இட்டு மகிழ்ச்சியே அளப்பரிய செயல். வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  12. இந்த மாதிரி விஷப்பரீச்சை செய்தால் ,மன நல மருத்துவரைப் பார்க்க வேண்டி வரலாம் :)

    ReplyDelete
  13. நல்ல அர்த்தமுள்ள கவிதை சகோ.

    ReplyDelete
  14. நமக்குள் இருப்பது நாமே! உண்மை!

    ReplyDelete
  15. அருமையான தத்துவம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. //உனக்குள் உன்னைப் பார்
    நான் தெரிவேன் என்றும்.//
    அவ்வளவுதான்!அருமை
    ஓட்டுல ஒண்ணு கூட்டிக்குங்க

    ReplyDelete
  17. அருமையான வரிகள்!

    ReplyDelete