Thursday 20 March 2014

கவிதைத் துளிகள் - கவிதை - 17

குளிர் கவிதைகள்...!

கவிதைத்  துளி - 11

குளிர் - 
கும்மியடிக்க...!
குளம்பி
என் நாவில் -
ஆவிபறக்க...
இதமான வெட்பம்
மெய்பரவ...
இன்சுவை  நொடிகள்...!
ஒவ்வொன்றுமே...!!!


கவிதைத்  துளி - 12

விடிந்த  பின்னும்
நிற்கிறது -
விடியல்...!!!


கவிதைத்  துளி - 13

வீராப்பு  மனிதன்..
விரைப்பாய்...
நின்றான்...!

குளிரிடம்
வீம்பு  காட்டியதால்...
விரைத்துப்  போனான்...!!!


கவிதைத்  துளி - 14

உள்ளம்
குளிர்ந்தால்...!
அமைதி...!!!

உடல்
குளிர்ந்தால்...!
சமாதி...!!!


கவிதைத்  துளி - 15

சூரியன்
என்ன  ஆனான்...?

சூழ்நிலைக்  கைதி
ஆனான்....ஆம்....!!!



ஆர்.உமையாள் காயத்ரி.



2 comments:

  1. அழகான சிறு துளிகள்... ரசித்தேன்.

    ReplyDelete
  2. மிகவும் அருமை. முயற்சி தொடரட்டும்..

    ReplyDelete