Thursday 3 July 2014

கிருஷ்ண கானம்


பாடல்

                                              மதுரா  நகரத்து  கிருஷ்ணய்யா
                                              மனங்களைக்  கவர்ந்த  கண்ணய்யா
                                              குழல்  எடுத்து  நீ  ஊதினால்
                                              குழைந்து  போகாதோ  எங்கள்  நெஞ்சம்         (மதுரா)

                                              மதுரம்  மதுரம்  உந்தன்  பெயர்
                                              மயக்கும்  சிரிப்போ  மதுர  அலை
                                              உள்ளம்  கொள்ளை  போனதனால்
                                              உந்தன்  பால்  கரைந்ததடா                                     (மதுரா)

                                              மதுரமே  உந்தன்  ரூபமாகும்
                                              மாயை  உந்தன்  லீலையாகும்
                                              மதுக்கடல்  சயனத்தில்  கண்மூடி
                                              உலகை  புன்னகைத்து  நோக்குகிறாய்             (மதுரா)




                                                      நான் வரைந்த கிருஷ்ணர் படம்
                                                      கான்வாஸ் - ஆயில் ஓவியம்



அழகான கிருஷ்ண கானத்தை என்னுள் இருந்து வெளிப்படுத்திய

ஶ்ரீ கிருஷ்ணருக்கு நன்றி.


ஓவியத்தை முன்பு புகைப்படமாக  எடுத்தது. சற்று தெளிவாக வரவில்லை.



ஆர்.உமையாள் காயத்ரி.



9 comments:

  1. வணக்கம்

    சொற்சுவை ததும்ப
    நிதங்களை நேகிழவைக்கும்
    கானம் கண்டு உவகைகொண்டேன்
    பாடிப் பரவமடைந்தேன்

    பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மதுரகானம் மயக்குதே மனதை!..
    இதுகைவண்ணம் ஈர்க்குதே கண்ணை!...

    அருமை!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  3. நன்றி சகோதரி.

    ReplyDelete
  4. இந்த கிருஷ்ண கானம், எங்களின் மனதையும் மயக்குகிறதே.

    தங்களின் படமும் அழகாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அழகான படம், அழகான பாடல். நீங்கள் சகலகலாவல்லிதான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மதுரம் போல் இனிக்கிறது கானம்.

    ReplyDelete