Wednesday 12 November 2014

விழித்தல்...!!!


உலகைப் புரிய வைத்த
உறவுகளுக்கு ஒரு கோடி நன்றிகள்

சூழலைப் புரிய வைத்த
சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

மாற்றிமாற்றிப் பேசி மாறாத ஒன்றைப் புரிய வைத்த
மற்றவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

உண்மைகள் அடிவாங்கி யடிவாங்கி கெடு
பெயரால் அல்லலுறுமென்பதே யுண்மை

தாயும் தந்தையும் தாங்கவில்லை  யென்னை
கர்மமேயென தயுமானவனடி சேர்ந்தார்கள்

மெய்மையும் பொய்மையும் இவ்வுலக வாசமென
புரியஇவ்வளவு ஆண்டுகள் வீணானதே

அகம் புரியாது ஆசைகொண்டது புறமதுக்கே
அடங்குமாசை அகத்திருப்போன் காட்ட

நிறைந்தவனை வாரி யணைக்க நிறைந்தது
நிறையா மனமது வெட்கி

கதைகளால் கட்டிப்போட்டு கணாததைக் காண
கண்ணன் அழைத்தானே காணாது

உடலது கழல உள்ளமது விழிக்க
உகந்தேவுடனிருந்து காட்டுநல் வழி.
  




படம் கூகுள் நன்றி





10 comments:

  1. மாற்றிமாற்றிப் பேசி மாறாத ஒன்றைப் புரிய வைத்த
    மற்றவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

    அஹா... அருமை... உண்மை...

    ReplyDelete
  2. இப்படி எல்லாவற்றையும் புரிய வைத்த தங்களுக்கு
    ஒரு கோடி நன்றிகள்.

    ReplyDelete
  3. கவிதை சிறப்பா இருக்கு ... பாராட்டுக்கள் ..

    ReplyDelete
  4. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நன்றி மறந்த உலகமம் இதில் இத்தனை நன்றி சொல்லும் அழகான கவிதை!

    ReplyDelete
  6. மாற்றிமாற்றிப் பேசி மாறாத ஒன்றைப் புரிய வைத்த
    மற்றவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

    மெய்மையும் பொய்மையும் இவ்வுலக வாசமென
    புரியஇவ்வளவு ஆண்டுகள் வீணானதே


    ஆஹா அருமையான வரிகள்! ரசித்தோம்! நன்றிகளுடன்!

    ReplyDelete
  7. உடலது கழல உள்ளமது விழிக்க
    உகந்தேவுடனிருந்து காட்டுநல் வழி.//

    நல்வழி காட்டுவார் இறைவன்.

    ReplyDelete